தில்லியில் வெடிவிபத்து: ஒருவர் பலி

சணல் பையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தில்லியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.

தில்லி நயா சந்தைப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சணல் பையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இதனிடையே விபத்து குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com