ஜோஹோர்:
மலேசியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்திய வம்சாவளியினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவின்ஜோஹோர் பஹ்ரு நகரிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவன பரவி அருகிலிருந்த மற்ற அறைகளுக்கும் பரவியது. இதி்ல் இரண்டாவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரில் மூவர் இந்திய வம்சாவழியினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.