முதல்வர் பூரண குணமடைய வேண்டி ஆயுஸ்ய யாகம்

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆயுஸ்ய யாகம் நடைபெற்றது.

வேலூர், 

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆயுஸ்ய யாகம் நடைபெற்றது.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி வேலூர் ஒன்றிய அதிமுக சார்பில் பைரவர் அபிஷேகம், ஆயுஸ்ய, மித்ருஞ்சய யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி பத்மநாபன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எஸ்.விஜய், ம.கலையரசு, சி.ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ஆவின் தலைவர் வேலழகன் உள்பட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com