உத்தர பிரதேச மாநில அமைச்சர் பவன் பாண்டே சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவரை 6 வருடத்திற்கு கட்சியிலிருந்து நீக்கி சமாஜ்வாதி மாநில தலைவர் சிவபால் உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை, நடந்த சமாஜ்வாதி கூட்டத்தின் போது அமைச்சர் பவன் பாண்டே, எம்.எல்.சி., அஷூ மாலிக்கை தாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீக்கப்பட்ட அமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.