வரும் 2017ஆம் ஆண்டில், யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முன்கூட்டியே ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று, யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வை, முதல்நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தி வருகிறது. இதில், முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம்.
யுபிஎஸ்சி நிறுவனம் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் வரும் 2017ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் மாதத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.