சத்தீஸ்கர்: 13 நக்ஸல்கள் கைது

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தில் 13 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தில் 13 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நாராயண்பூர் மாவட்டத்திலுள்ள கீலம் வனப்பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகளின் கூட்டம் நடைபெறுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடி படை மற்றும் மாவட்ட போலீஸôர் அடங்கிய கூட்டுப் படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையில், 13 நக்ஸலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் ஒருவர், ஏற்கெனவே ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவராவார். 13 பேர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com