ராமேசுவரம்,
ராமேசுவரம் கெந்தமாதன பகுதியில் இளம்பெண்ணை கடத்தி செல்லப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பான சூழ்நிலைகள் காணப்பட்டது..
ராமேசுவரம் கெந்தமாதன பர்வதம் பகுதியில் வசித்துவருவபர் சந்திரன்.இவருடைய மகள் வனிதா(16) ராமேசுவரம் பகுதியில் அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். கவிதாவை அதை பகுதியில் வசித்து வந்த ஒரே கும்பத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் முத்து (27), மற்றும் காளிதாஸ் மற்றும் காளிதாஸ் மனைவி ராசு ஆகியோர்கள் புதன் கிழமை கடத்தி சென்றுள்ளனர்.
இது குறித்து கவிதாவின் தந்தை சந்திரன் ராமேசுவரம் நகர் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்தனர். பின்னர் காவல் நிலை ஆய்வாளர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸôர் கவிதாவையும்,கடத்தல் கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.