சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அங்கு போட்டியிட்டு நானே வெற்றி பெறுவேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா கூறுகையில், ஜனநாயகம் காக்கப்பட பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்.
தோல்வி பயத்தால் தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளார். உழல் வழக்கில் சிக்கிய தினகரன் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்க வேண்டும். பணப்பட்டுவாடா உண்மை என்பதை கண்டறிந்து
தேர்தலை ரத்து செய்ததை வரவேற்கிறேன். ஜனநாயகப்படி தேர்தல் நடந்தால் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.