தில்லி: தில்லியில் உள்ள மூன்று நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்த பாஜக மொத்தம் 181 வார்டுகளில் வெற்றி பெற்று தில்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி மூன்று நகராட்சிகளிலும் வெற்றி பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதால் தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.