தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
திருவள்ளூரில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு நிகரான ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த 4.5 லட்சம் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவந்தனர்.

இந்தநிலையில் அமைச்சர் உதயக்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் உதயகுமார் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com