கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் சிஎம்டிஏ ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.