புதுதில்லி: தில்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் சுகேஷிடம் இருந்து தில்லி போலீசார் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்க முற்பட்டதாக தினகரன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். விசாரணை பலக்கட்டமாக பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கைதாகி இருக்கும் தரகர் சுகேஷ் ரூ. 50 லட்சத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தினகரன் - சுகேஷிடையே தொலைபேசி உரையாடல் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினகரனின் எஸ்பிஐ வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தினகரனின் ஆடிட்டர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் தில்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.