காஷ்மீர் அவ்னீரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவ்னீரா பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தபோது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படைவீரர்கள் திருப்பிச் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.