காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நேபாளத்துக்கான தூதர் மஞ்சீவ் சிங் பூரி தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்ட சுதந்திர தின உரையை அவர் வாசித்தார். அப்போது, நேபாளத்துக்கு இந்தியா நன்கொடையாக அளித்த 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பேருந்துகளின் சாவியை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மஞ்சீவ் சிங் பூரி ஒப்படைத்தார்.
61 நூலகங்கள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு புத்தகங்களும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன. மேலும் அங்கு உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு 57.3 கோடி நேபாள ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.