உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நிவாரண உதவிகளை அளிப்பதற்கு தேவைப்படும் நிதியை தயங்காமல் பயன்படுத்துமாறு அந்த மாவட்ட ஆட்சியருக்கு அவர் உத்தரவிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோண்டா, பரெய்ச், பாராபங்கி உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்காக மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.