ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி: ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்பு குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாக செயல்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பைஸ், நளினி, ஜெயகுமார், மற்றும் ரவிசந்திரன் ஆகிய ஏழு குற்றவாளிகளே உள்ளனர்,  

இது தொடர்பான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com