மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விசாரிக்க ஆணையம் அமைக்க உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: - பாரதிய ஜனதாவை பலப்படுத்துவது தான் எங்கள் நோக்கம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகையில் உள்நோக்கம் இல்லை. எனினும் அமித்ஷா தமிழகம் வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இது நேர்மறை மாற்றமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் அதிமுக அணிகள் இணைப்பு என்பது உடகட்சி பிரச்னை. இதில் பா.ஜ.க.,விற்கு எந்தவித பங்கு இல்லை. ஆனால், திருநாவுகரசர் போன்றோர் தவறாக திசைதிருப்புகின்றனர் என்று அவர் கூறினார்.