உத்தரப்பிரதேசத்தில் பூரி-ஹரித்துவார்-கலிங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அங்குள் முஸாபர்நகர் கதாவல்லில பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ரயில்வே துறையைச் சார்ந்த அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விபத்து குறித்து காரணங்களை விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.