கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காரில் புறப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேதத்தை பார்வையிடச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை குமரியில் உள்ள அரசினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங், எஸ்.பி. துரை ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினர்.
அப்போது புயல் சேதம், நிவாரணம், மீனவர்களை மீட்பதில் சுணக்கம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காரில் புறப்பட்டார். இரவு 9 மணிக்கு மதுரை செல்லும் ஆளுநர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.