ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 2011 -ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவர், ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.

2016 -இல் அதிமுக தொடர்ந்து 2 -ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, ஷீலா பாலகிருஷ்ணனும் அரசு ஆலோசகராக நீடித்து வந்தார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (மார்ச் 31) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவர் தாமாகவே முன் வந்து அரசு ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்.  

தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை தீவரப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

டிசம்பர் 20-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவும் டிசம்பர் 21-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com