விமான பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய பெண் பயணி கைது 

விமானத்தில் புகை பிடிக்க அனுமதியில்லை என தடை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், பயணிகளைக் கொலை 
விமான பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய பெண் பயணி கைது 

விமானத்தில் புகை பிடிக்க அனுமதியில்லை என தடை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில், ஒரேகான் மாகாணத்தின் போர்ட்லாண்டில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட சவுத்வெஸ்ட் ஏர்வேஸ் விமானம் கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமெண்டோவிற்கு 136 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் விமான கழிவறையில் ரகசியமாக புகை பிடித்ததை புகை டிடெக்டர் கருவி மூலம் கண்டுபிடித்த விமான ஊழியர்கள் பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

ஆனால், அந்தப் பெண் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், விமானம் அவசரமாக சாக்ரமென்டோ விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு வலேரி(24) என்ற பெண்ணை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சாக்ரமெண்டோவில் உள்ள உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com