புதுதில்லி: எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த சிறப்பு நீதிமன்றம் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 1,581 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.