பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்று தெரியவந்துள்ளதாக ராஜஸ்தான், பாலிக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் நேற்று தெரிவித்திருந்தது குறிபிடத்தக்கது.