வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தில்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் சாலையில் பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.
மேலும் தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் 19 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் 2 ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.