தொடரை வென்றது இந்தியா! 

இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
தொடரை வென்றது இந்தியா! 

 
விசாகப்பட்டினம்: இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும், 2-ஆவது ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் அபார வெற்றி கண்டது. இதனால், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமநிலையில் இருந்தது. 

இதையடுத்து 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 27.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் தரங்கா, சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சமரவிக்ரமாவும் 42 ரன்களுக்கு வெளியேறினார்.

அப்போதைய சூழலில் இலங்கை 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்கத் திணறினர். சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி அடுத்த 55 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.

சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாண்டியா 2, பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 32.1 ஒவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதிகபட்சமாக ஷிகர் தவான் 100, ஷ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் எடுத்தனர் கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். தினேஷ் கார்த்திக் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com