நாகையில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால் 2-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இன்று 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மற்றும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.