அரவட்லா சாலையில் 800 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

ஆந்திர மாநிலத்துக்கு காரில் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி பேர்ணாம்பட்டு அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்துக்கு காரில் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி பேர்ணாம்பட்டு அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

பேர்ணாம்பட்டு போலீஸார் இன்று தமிழக - ஆந்திர மாநில எல்லையான அரவட்லா சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 800 கிலோ எடையுள்ள 16 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அதை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர். தரைகாடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பைரோஸ் (23) கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com