ஆற்காடு தலமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

ஆற்காடு தலைமைதபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது வெடிக்கும் என்று

ஆற்காடு தலைமைதபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது வெடிக்கும் என்று  புதன்கிழமை மாலை   தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஆற்காடு தலைமைதபால் நிலையம் ஜக் அக்ரஹாரம் தெருவில் உள்ளது.இதில் புதன்கிழமை மாலை  5 மணி அளவில்  உள்ள ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் நிலையில்   அலுவலகத்தில் உள்ள தொலை பேசி மணி ஓலித்துள்ளது. இதனை தலைமை தபால் நிலைய அலுவலர் அன்பழகழன் எடுத்துள்ளார் அப்போது எதிர் முனையில் பேசியில் நபர் இந்தியும் தமிழும் கலந்துபேசி தபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பு துண்டித்துள்ளார்.  

இது  குறித்து நிலைய அலுவலர் ஆற்காடு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் மற்றும்  வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள்  மோப்ப நாய் லூசியுடன் சென்று சோதனை மேற்கொண்டனர் சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை இது வெறும் புரளி தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர்  விஜயகுமார் நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.  இதனால்  ஆற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com