தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (17.0.17) காலை முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,
பீட்டாவை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் இந்த போராட்டத்துக்கு நடிகை கவுதமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடிவரும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.