சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவிற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
காட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் பிரிவு இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்ட வரைவு நாளை காலை குடியரசுத் தலைவர் கையெழுத்தாகும் என்றும் காலை 11 மணிக்கு அவசர சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.