சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக ஜனவரி 21, 22ம் தேதி நடக்க இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனவரி 21, 22ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 28, 29ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.