புதுச்சேரியில் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன
அவசர சட்டம் பிறப்பிக்க பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2011, ஜூலை 11ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில், காளைகளை, மத்திய சுற்றுசூழல், வனத்துறை அமைச்சகம் சேர்த்தது.
இதனால், தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானது. இதற்கு பிறகு இப்பட்டியலில் இருந்து காளைகளை நீக்க எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு தற்போது அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த போட்டியில் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.