எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்களுடன் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 8 பேரும் காங்கேசம் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்தும் தமிழக மீனவர்கள், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட விசை படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.