தெற்கு ஜப்பானில் மழை வெள்ளம் : பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தெற்கு ஜப்பானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு ஜப்பானில் மழை வெள்ளம் : பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தெற்கு ஜப்பானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 27 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட 12,000 போலீஸார், ராணுவத்தினர், தீயணைப்பு மற்றும் கடற்படை வீரர்களை ஜப்பான் அரசு உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கியூஷு தீவில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. இதனால், வீடுகள் மற்றும் பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மழையின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்ததாக வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com