ராமநாதபுரம் மாவட்டம் நம்புதளை என்ற கடலோர கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லை மீறியதற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், நாட்டுப் படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் அவர்கள் அனைவரையும் கடற்படை காவலர்கள் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் ஜூலை 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பின்னர் அந்த 4 மீனவர்களும் இலங்கையின் ஜாஃப்னா சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.