தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் படகு, மீன்பிடி வலைகள்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் படகு, மீன்பிடி வலைகள்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதளை என்ற கடலோர கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லை மீறியதற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், நாட்டுப் படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் அவர்கள் அனைவரையும் கடற்படை காவலர்கள் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் ஜூலை 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பின்னர் அந்த 4 மீனவர்களும் இலங்கையின் ஜாஃப்னா சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com