புதுதில்லி: சிகரெட் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிகரெட் மீதான வரி 28 சதவீதம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிகரெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத கூடுதல் வரியுடன், சிகரெட்டின் அளவுக்கு ஏற்ப வசூலிக்கப்படும் கூடுதல் தீர்வையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.