மணிப்பூரில் கனமழையால் விரிசல் அடைந்திருந்த முக்கிய பாலம் உடைந்து விழுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய பாலமான ‘பாரக் பாலம்’ கனமழை காரணமாக விரிசல் அடைந்து பலவீனமாக இருந்துள்ளது.
இந்நிலையில் இன்று சரக்கு லாரி ஒன்று பாலத்தை கடந்து சென்றபோது உடைந்துள்ளது. இதனால், ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் நோக்கி வந்த 200 சரக்கு லாரிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.
பாலத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.