டெங்கு, சிக்கன்குனியா உயிரிழப்பு பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்
டெங்கு, சிக்கன்குனியா உயிரிழப்பு பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சென்னை:  டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

போர்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுத்துள்ள உத்தரவில் வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதிக்குள்  மாவட்ட ரீதியக டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் பட்டியலை விரிவான அறிக்கையாக அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com