ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. 2-வது அரை இறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது இந்தியா.
இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. சுமார் 10 ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.