சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பொதுச்செயலாளர் முடிவுக்கு கட்சியின் 122 எம்எல்ஏக்கள் கட்டுப்படுவார்கள் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் விரைவில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.