சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பள்ளிக்கரனை, நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்கிறது. கடும் வெயிலுக்கு பின் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.