மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டார்.
ரஷ்யாவில் நாளை நடக்க உள்ள இந்தியா மற்றும் ரஷ்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஜேட்லி கலந்து கொள்வார் என்றும் அங்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை சந்திப்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழுவில் இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றி விவாதிகப்பட உள்ளது.
மேலும் ஜூன் 23 ம் தேதி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி ஷோகுயுவுடன் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றிய இந்தியா-ரஷ்ய இண்டர்நேஷனல் கமிஷனின் 17 ஆவது கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.