சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 15 பேர் உயிரிழப்பு

சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 15 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 15 பேர் உயிரிழப்பு

சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 15 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா தலைநகர் மொகாதிசூவில் சப் பிரிவினை கோரி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அல் ஷெபாப் இயக்கத்தினர் இன்று வதாஜிர் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்தில், குண்டு வைத்தனர்.

சக்திவாய்ந்த இந்த குண்டுவெடித்ததில், பொதுமக்கள் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர். மொகாதிசூவில் அண்மைக்காலமாக, பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com