ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள லஷ்கர் கா வங்கி வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பிய கார் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த திடீர் தாக்குதலில், வங்கியில் கூடியிருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 50-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து லஷ்கர் கா மாகாண செய்தி தொடர்பாளர் ஒமர் சாக் கூறுகையில், "இந்த தாக்குதலில் போலீசார், ராணுவத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் காபுல் வங்கி ஊழியர்கள் என 20-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.