தில்லி புறப்பட்டார்  முதல்வர் பழனிசாமி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முதல்வர் பழனிசாமி தில்லி புறப்பட்டார்.

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முதல்வர் பழனிசாமி தில்லி புறப்பட்டார்.  குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அம்மா அணி நேற்று அறிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி சார்பில் ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அவரை நேரடியாகச் சந்தித்து கட்சியின் ஆதரவை முதல்வர் தெரிவிக்க உள்ளார்.

பிரதமர் மோடியையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வராக பொறுப்பேற்றப் பிறகு எடப்பாடி பழனிசாமி தில்லி செல்வது இது மூன்றாவது முறையாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com