பாகிஸ்தானில் பஹவால்பூர் அஹமட் பட் ஷார்கியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டேங்கர் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 123 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் ஆயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. அப்போது டேங்கரில் இருந்து கசியும் எண்ணெய் பிடிக்க பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர். இதையடுத்து டேங்கர் திடீர் என வெடித்தது.
இந்த விபத்தில் 123 பேர் பலியானதகாவும் 40 பேர் தீக்காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீக்காயம் அடைந்தவர்கள் மாவட்ட தலைமையகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.