மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 23 புள்ளிகள் உயர்ந்து 30,858 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 9,504 புள்ளிகளாக உள்ளது. பி.எஸ்.எஸ் அடிப்படை பொருட்கள் குறியீட்டு எண் 1.16% ஆக உயர்ந்ததால் உலோக குறியீட்டெண் அதிகபட்சமாக 2.15% அதிகரித்து காணப்பட்டது.
ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. எஸ்.பி.ஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் சரிவை சந்திதுள்ளன.