பட்டு வளர்ச்சி, கைவினைப் பொருட்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பெஞ்சமின்

பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் பெஞ்சமின் வெளியிட்டுள்ளார்.

சென்னை:  பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் பெஞ்சமின் வெளியிட்டுள்ளார்.

அதன்படி பூம்புகார் கைத்திறன் விருதுக்கான ரொக்க பரிசு தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் ரூ.5.25 கோடிக்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் சிறப்பு பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பட்டு வளர்ப்பு துறையில் 13 உதவி ஆண்டுதோறும் மார்ச் 5-ம் தேதி கைவினை கலைஞர்கள் தினம் கொண்டாடப்படும் எனவும் தேசிய அளவில் கைவினை பொருட்களுக்கான கண்காட்சிகளை நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மதுரை காதிகிராப்ட் 80 லட்சம் ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்படும் என்றும் அமைச்சர்  பெஞ்சமின் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com