காவல்துறையில் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்): என்.பாஸ்கரன்-சமூகநீதி மற்றும் மனித உரிமைத்துறை டி.ஐ.ஜி. (சமூகநீதி மற்றும் மனித உரிமைத்துறை எஸ்.பி.)
சுகுணாசிங்-திருநெல்வேலி மாவட்டம் தென்காசி ஏ.எஸ்.பி. (திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி ஏ.எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் பாஸ்கரன் எஸ்.பி. பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து, அதேப் பிரிவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இவர்கள் இருவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.