சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க
சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.     இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபுரம் கிராமம் புலியூர்குறிச்சி எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்து நடைபெற்றது. அதில், மஞ்சு, சிவரஞ்சினி, தீபா, சங்கீதா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்க ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com