கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபுரம் கிராமம் புலியூர்குறிச்சி எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்து நடைபெற்றது. அதில், மஞ்சு, சிவரஞ்சினி, தீபா, சங்கீதா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்க ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.